Tuesday, July 17, 2018

கண்ணே கலைமானே....



கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே

கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிரோ... ஓராரிரோ…
ராரிரோ… ஓராரிரோ…

கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதிலொரு அமைதி
நீயோ கிளிப் பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிரோ... ஓராரிரோ…
ராரிரோ… ஓராரிரோ…


காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைப்பேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சன்னிதி  

கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிரோ... ஓராரிரோ…
ராரிரோ… ஓராரிரோ…

ராரிரோ.. ஓராரிரோ…
ராரிரோ.. ஓராரிரோ…

=======================================
படம்:                      மூன்றாம் பிறை
பாடகர்:                  கே.ஜே. யேசுதாஸ்
நடிகர்கள்:              கமல்ஹாசன், ஸ்ரீதேவி
பாடல் வரிகள்:    கண்ணதாசன்
இசை:                     இளையராஜா
படம் வெளிவந்த வருடம்: 1983
=======================================

No comments:

Post a Comment