Tuesday, July 17, 2018

உனக்கென்ன மேலே நின்றாய்...


தக தின தக ததிந்தோம்....தக தின தக ததிந்தோம்
தக தின தக ததிந்தோம் ததோம் ததோம் த தகதின தோம்
ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம்

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனது ஆணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

தாய் மடியில் பிறந்தோம்
தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென மலர்ந்தோம்
நாடகத்தில் கலந்தோம்
தக தின தக ததிந்தோம் ததோம் ததோம் த தகதின தோம்
ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம்

ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
பூவென்று முள்ளைக் கன்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா

தக தின தக ததிந்தோம் ததோம் ததோம் த தகதின தோம்
ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம்

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனது ஆணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

+++++++++++++++++++++++++++++++++++++
படம் : சிம்லா ஸ்பெஷல்
பாடல் : உனக்கென்ன
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
+++++++++++++++++++++++++++++++++++++

1 comment:

  1. Each & every department in this song perfect. Nice & Excellent.

    ReplyDelete