Saturday, July 13, 2019

கண்ணான கண்ணே...


கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா.
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூப்போல நீவ வா.

நான் காத்து நின்றேன்
காலங்கள்தோறும்
என் ஏக்கம் தீருமா
நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா

கண்ணீராய் மேகம் தூவும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா

ஆராரிராரோ
ராரோ ராரோ
ஆராரிராரோ
ஆராரிராரோ
ராரோ ராரோ
ஆராரிராரோ

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா.
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூப்போல நீவ வா.

அலைக்கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே.

புதை மணலில் வீழ்ந்தேன்
புதைந்திடவே இருந்தேன்
குறுநகையை தந்தே
மீட்டாய் என்னை.

விண்ணோடும் மண்ணோடும்
ஆடும் பெரும் ஊஞ்சல்
மனதோரம்.
கண்பட்டு நூல்விட்டு
போகும் என ஏதோ
பயம் கூடும்.

மயில் ஒன்றை பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்.
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும்
இதே வினாடி

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா.
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூப்போல நீவ வா.

நீ தூங்கும் போது
முன்னெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்.
போர்வைகள் பொத்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்

எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும்
மௌனத்தில் பேசணும்

ஆராரிராரோ
ராரோ ராரோ
ஆராரிராரோ
ஆராரிராரோ
ராரோ ராரோ
ஆராரிராரோ

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே...


திரைப்படம் ---  விஸ்வாசம்
பாடல் ஆசிரியர் :  தாமரை
பாடகர் :  சித் ஸ்ரீராம்