Wednesday, July 4, 2018

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது...


காற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம்காதோரம் ஒரு சேதி சொல்வோம் -(2)
கரும்புலியாகி நின்றோம் புயலாகி வென்றோம்
புரியாத புதிராகச் சென்றோம்
எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது -இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள் -எங்கள்
காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்
வாழும்போது மானத்தோடு வாழ்பவன்தானே தமிழன் -தன்
வாசலில் அடிமை சேகவம் செய்து வாழ்பவன் என்ன மனிதன்
வழியில் இடறும் பகைகள் எரிய
வருக வருக தமிழா -(2)
உன் விழியில் வழியும் நீரைத் துடைத்து
வெளியில் வருக தமிழா
காற்றும்நிலவும் யாருக்கெனினும் கைகள் கட்டுவதில்லை -நாங்கள்
போகும் திசையில் சாகும்வரையில் புலிகள் பணிவதுமில்லை
மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்
முளைப்போம் இந்த மண்ணில் -(2)
எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து
மூட்டும் தீயைக் கண்ணில்


No comments:

Post a Comment