Monday, June 18, 2018

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....


நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை
நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றும் இல்லை

முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை
நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றும் இல்லை

ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது

ஒருவர் மட்டும் குடியிருந்தால்
துன்பம் ஏதும் இல்லை
ஒன்று இருக்க ஒன்று வந்தால்
என்றும் அமைதி இல்லை

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை
நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றும் இல்லை

எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது

பாதையெல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்து விடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்து விடும்

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லம்
நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றும் இல்லை

Sunday, June 17, 2018

ஆறு மனமே ஆறு...


ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு..

மலரே என்னென்ன கோலம்...



மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்

மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்

தினமும் வெவ்வேறு நிறமோ
இது தான் உன்னோடு அழகோ

மலரே என்னென்ன கோலம்
மலரே நலமா

வசந்தம் உன்னோடு சொந்தம்
உனக்கேன் என்னோடு பந்தம்

வசந்தம் உன்னோடு சொந்தம்
உனக்கேன் என்னோடு பந்தம்
வசந்தம் உன்னோடு சொந்தம்
உனக்கேன் என்னோடு பந்தம்

ஏழ்மையின் இலை உதிர் காலத்தில்
இங்கே பூ வேது காயேது
நினைத்தால் எட்டாத தூரம்
எனக்கேன் உன் மீது மோகம்

திருச் சபை ஏறிடும்
அர்ச்சனை மலரே
நீ எங்கே நான் இங்கே
திருச் சபை ஏறிடும்
அர்ச்சனை மலரே
நீ எங்கே நான் இங்கே

நீ எங்கே நான் இங்கே

மலரே என்னென்ன கோலம்
மலரே நலமா மலரே நலமா

நிலவை வானத்தில் பார்த்து
அருகே வாவென்று கேட்டு

நிலவை வானத்தில் பார்த்து
அருகே வாவென்று கேட்டு

அழுதிடும் குழந்தையின்
அம்புலி பருவம் என்னோடு
நான் கண்டேன்

இருக்கும் வர்கங்கள் ரெண்டு
உலகில் இப்போதும் உண்டு
சமவெளி மலைகளை
தழுவிட நினைத்தால்

சமவெளி மலைகளை
தழுவிட நினைத்தால்
வழியேது முடியாது
வழியேது முடியாது
வழியேது முடியாது
மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்
தினமும் வெவ்வேறு நிறமோ
இது தான் உன்னோடு அழகோ

மலரே என்னென்ன கோலம்



திரைப் படம்: ஆட்டோ ராஜா (1982)
குரல்: S P B
இசை: சங்கர் கணேஷ்
நடிப்பு: விஜயகாந்த், வனிதா
இயக்கம்: K விஜயன்

Thursday, June 14, 2018

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்...



திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
அசுரரை வென்ற இடம் – அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் – வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்
அசுரரை வென்ற இடம் – அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் – வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு
மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு
ஆறுமுகம் இங்கு
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்…………முருகா
திரைப்படம் : தெய்வம்
பாடியவர்கள் : சீர்காழி கோவிந்தராஜன்; டி.எம்.சௌந்தரராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்
இசை : குன்னக்குடி வைத்தியநாதன்

தளராத துணிவோடு...



தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

அழகான திருமேனி தணலானதோ இந்தி

அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ

தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

நீ நடந்த பாதையெங்கும் பூ மலர்ந்தது

தமிழீழமெங்கும் உந்தனது பெயர் கலந்தது

தாயகத்துப் போர்க்களத்தில் நீ முழங்கினாய்

தம்பி தானையிலே தளபதியாய் நீ விளங்கினாய்

தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

அமைதி தேடி வந்த புறா சிறகிழந்தது )

கொடும் அரக்கர்களின் அம்பு பட்டு துடிதுடித்தது )

இமய நாடு உந்தனுக்கு குழி பறித்தது

உன்னை இழந்ததினால் எங்கள் நெஞ்சு பதைபதைக்குது

தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

சிங்களத்துப் படைகளோடு போராடினாய் )

வந்த இந்தியர்களோடு அன்று வாதாடினாய் )

பொங்குகின்ற புலிகளுக்கு வழி காட்;டினாhய் )

இன்று புயல் படுத்த மாதிரியாய் விழிமூடினாய் )

தளராத துணிவோடு களமாடினாய்

இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

அழகான திருமேனி தணலானதோ

இந்தி அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ

கல்லறை மேனியர் கண் திறப்பார்களே....




கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே

அவர் கண்திறந்து சின்ன புன்னகைத்து வந்து கைதொழுவார்களே மேனியிலே

மன்னவரை பாடுதற்கு இந்த ஜென்மம் போதவில்லை

கல்லறையில் போடுதற்கு கோடி மலர் பூக்கவில்லை கோடி மலர் பூக்கவில்லை

கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே

அவர் கண்திறந்து சின்ன புன்னகைத்து வந்து கைதொழுவார்களே மேனியிலே


கோயில் மணி ஓசையிட தேகம் மெல்ல உயிர் பெறும்

ஆறு மணியானவுடன் வாசல் மெல்ல திறந்திடும்

கல்லறை தெய்வங்கள் கண்ணெதிரே வந்து என்னென்னவோ கதைப்பார்கள்

அந்த புன்னிய நேரத்தில் வண்ணங்கள் ஆயிரம் மின்னிடவே சிரிப்பார்கள்

இது குருதி ஓடும் நரம்பில் ஆடும் உணர்வின் ஆனுபவம்

யாரும் வெளியில் நின்று அறிய முடியா புதிய தரிசனம்


காற்றெழுந்து வீசிடவே கண்ணெதிரே வந்தெழுவார்

காத்திருப்போர் காதுகளில் வார்த்தை ஒன்று பேசிடுவார்

தீபங்கள் ஏற்றிடும் தோழர்களை பார்த்து தாகத்துக்கும் பதில் கேட்பார்கள்

வண்ண பூவுடனே வரும் தோழியரை பார்த்து தேசத்துக்கும் வழி கேட்ப்பார்கள்

இது குருதி ஓடும் நரம்பில் ஆடும் உணர்வின் ஆனுபவம்

யாரும் வெளியில் நின்று அறிய முடியா புதிய தரிசனம்

ஓ மரனித்த வீரனே.....



ஓ மரனித்த வீரனே

உன் சீருடைகளை எனக்குத்தா

உன் பாதனிகளை எனக்குத்தா

உன் ஆயுதங்களை எனக்குத்தா


ஓ மரனித்த வீரனே!

உன் சீருடைகளை எனக்குத்தா

உன் பாதனிகளை எனக்குத்தா

உன் ஆயுதங்களை எனக்குத்தா


உன் இறுதிப்பார்வையை பகையைவெல்லும் உன் துணிவை

எவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரை

உன் இறுதிப்பார்வையை பகையைவெல்லும் உன் துணிவை

எவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரை

தப்பியோடும் உன்விருப்பை தனித்து நிற்கும் தீர்மானத்தை

உன்தோழன் இருகூறாய் துண்டாடப்பட்டதனால்

தப்பியோடும் உன்விருப்பை தனித்து நிற்கும் தீர்மானத்தை

உன்தோழன் இருகூறாய் துண்டாடப்பட்டதனால்

உன் துன்பம் என்னவென்று நான் அறிந்து கொள்வதற்கு...


ஓ மரனித்த வீரனே!

உன் சீருடைகளை எனக்குத்தா

உன் பாதனிகளை எனக்குத்தா

உன் ஆயுதங்களை எனக்குத்தா


உன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா

எஞ்சிய வீடுகளில் பிழைத்தவர்கள் மத்தியிலே

உன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா

எஞ்சிய வீடுகளில் பிழைத்தவர்கள் மத்தியிலே

உற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றிச் சொல்வதற்கு

இன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு

உற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றிச் சொல்வதற்கு

இன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு

வார்த்தைகள் போதவில்லை வரலாறு பாடுமுன்னே.


ஓ மரனித்த வீரனே!

உன் சீருடைகளை எனக்குத்தா

உன் பாதனிகளை எனக்குத்தா

உன் ஆயுதங்களை எனக்குத்தா


ஓ மரனித்த வீரனே!

உன் சீருடைகளை எனக்குத்தா

உன் பாதனிகளை எனக்குத்தா

உன் ஆயுதங்களை எனக்குத்தா!

மாவீரர் யாரோ என்றால்...



மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!

தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள்!

மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!

தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள்!


ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர்!

ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்!

ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்!

மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!


மதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி

வதம் செய்யும் ஆட்சி தன்னை..

உதைத்திட எழுந்ததீரர் சிதைந்தது மானம் என்றால்

சினந்திடும் வீரவான்கள்..

உதைத்திட எழுந்த தீரர் சிதைந்தது மானம் என்றால்

சினந்திடும் வீரவான்கள்....

சுதந்திரம் உயிர் மூச்சென்றே துணிந்தெழும் ஞானவான்கள்!

துணிந்தெழும் ஞானவான்கள்!


(மாவீரர்....)


தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள்

வீசிய இளம் தென்றல்கள்!

விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும்

விடுதலை ஆண்பெண் பொன்கள்!

தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள்

வீசிய இளம் தென்றல்கள்!

விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும்

விடுதலை ஆண்பெண் பொன்கள்!

பற்றுகோடாகி எங்கள் பலமாகி நிற்கும் தூண்கள்!

பலமாகி நிற்கும் தூண்கள்!

நிலை மாறும் உலகில்.....



நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்

தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலையில் புது வாழ்வுக்கு எங்கே நினைவு

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்

பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
வாழ்கின்ற சாபம் அவன் முன்னோர் செய்த பாவம்

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்

படம் : ஊமை விழிகள் (1986)
இசை : மனோஜ் க்யான்
பாடியவர் : KJ யேசுதாஸ்
வரிகள் : ஆபாவாணன்

நல்லவர்க்கெல்லாம்...


நல்லவர்க்கெல்லாம்...

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா

அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா

அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா



நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா



நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை

விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை

விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா

பறவைகளே பதில் சொல்லுங்கள்

மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்

மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்



நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா



ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை

அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை

ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை

அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை

மனிதனம்மா மயங்குகிறேன்

தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே

தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே



நல்லவர்க்கெல்லாம்...

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா

அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா

அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா



படம் - தியாகம்

இசை : இளையராஜா

பாடியவர் - T.M.சௌந்தர்ராஜன்

பாடல் வரிகள் : கண்ணதாசன்

உள்ளத்தில் நல்ல உள்ளம்



உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா!

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா!

தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை

தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா!
நானும் உன் பழி கொண்டேனடா!

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா!

மன்னவர் பணி  ஏற்கும்
கண்ணனும் பணி  செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா..
மன்னித்து அருள்வாயடா
கர்ணா, மன்னித்து அருள்வாயடா..

செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா, வஞ்சகன் கண்ணனடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா!



Movie Karnan
Music Viswanathan Ramamoorthy
SingersSeerkazhi Govindarajan
Year 1964