Tuesday, March 28, 2023

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே..

படம்: புது புது அர்த்தங்கள்
பாடல்: கல்யாண மாலை கொண்டாடும்
இசை: இசைஞானி இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியன்


கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்

சுருதியோடு லயம் போலவே

இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே


கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்

சுருதியோடு லயம் போலவே

இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே


வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்

ஆனாலும் அன்பு மாறாதாது

மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்

பிரிவென்னும் சொல்லே அறியாதது

அழகான மனைவி

அன்பான துணைவி

அடைந்தாலே பேரின்பமே..

மடிமீது துயில

சரசங்கள் பயில

மோகங்கள் ஆரம்பமே..

நல்ல மனையாளின்

நேசம் ஒரு கோடி

நெஞ்சமெனும் வீணை

பாடுமே தோடி

சந்தோஷ சாம்ராஜ்யமே …


கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்

சுருதியோடு லயம் போலவே

இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே


கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து

பாடென்று சொன்னால் பாடாதம்மா

சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி

ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

நாள்தோறும் ரசிகன்

பாராட்டும் கலைஞன்

காவல்கள் எனக்கில்லையே

சோகங்கள் எனக்கும்

நெஞ்சோடு இருக்கும்

சிரிக்காத நாளில்லையே

துக்கம் சிலநேரம்

பொங்கிவரும்போதும்

மக்கள் மனம்போலே

பாடுவேன் கண்ணே

என் சோகம் என்னோடுதான் …


கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்

சுருதியோடு லயம் போலவே

இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

பாடறியேன் படிப்பறியேன்

 படம் : சிந்து பைரவி
பாடல் : பாடறியேன் படிப்பறியேன்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர் : சித்ரா


பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்

ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்


பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்

ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்


பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்

ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்

ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சுப் பழக்கமில்ல

இலக்கணம் படிக்கவில்ல தலைகணமும் எனக்கு இல்ல


பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்

ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்

---

அர்த்தத்த விட்டுப்புட்டா அதுக்கொரு பாவமில்ல

பழகின பாசையில படிப்பது பாவமில்ல

என்னமோ ராகம் என்னன்னமோ தாளம்

தலைய ஆட்டும் புரியாத கூட்டம்

எல்லாமே சங்கீதந்தான்...ஆஆஆ...

எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொறந்த சங்கதிதான்

சட்ஜமமென்பதும் தைவதமென்பதும் பஞ்ச பரம்பரைக்கு அப்புறந்தான்

---

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்

ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்

---

கவலை ஏதுமில்ல ரசிக்கும் மேட்டுக்குடி

சேரிக்கும் சேரவேணும் அதுக்கு உம் பாட்டப் படி

என்னயே பாரு எத்தன பேரு

தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டும் பாடு

சொன்னது தப்பா தப்பா...ஆஆஆ...

சொன்னது தப்பா தப்பா ராகத்தில் புதுசு என்னதப்பா

அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்புரத்துல சொன்னதப்பா


அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்புரத்துல சொன்னதப்பா

----

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்

ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்

ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சுப் பழக்கமில்ல

இலக்கணம் படிக்கவில்ல தலைகணமும் எனக்கு இல்ல


பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்

ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்


வாசமில்லா மலரிது..

படம் : ஒரு தலை ராகம்
பாடல் : வாசமில்லா மலரிது
இசை : டி.ராஜேந்தர்
பாடலாசிரியர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்


வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

வைகை இல்லா மதுரை இது...

மீனாட்சியை தேடுது...

ஏதேதோ ராகம்...என்னாளும் பாடும்

அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...


வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

--

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா

உனக்கேன் ஆசை நிலவவள் மேலே

மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை

உனக்கேன் ஆசை கலைமகள் போலே

மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை

உனக்கேன் ஆசை கலைமகள் போலே...

---

வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

--

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து

உனக்கேன் ஆசை ரதியவள் மேலே

வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்

உனக்கேன் ஆசை மன்மதன் போலே...

வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்

உனக்கேன் ஆசை மன்மதன் போலே...

---

வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

---

மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்

உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட

மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே

உனக்கேன் ஆசை உறவென்று நாட

மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே

உனக்கேன் ஆசை உறவென்று நாட...

---

வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

வைகை இல்லா மதுரை இது...

மீனாட்சியை தேடுது...

ஏதேதோ ராகம்...என்னாளும் பாடும்

அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...


வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...


Thursday, March 16, 2023

ராஜ ராஜ சோழன் நான்..

 ராஜ ராஜ சோழன் நான்

எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஒரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

திரைப்படம் : இரட்டை வால் குருவி
இசை: இளையராஜா
ஆண்டு : 1987
பாடகர் - கே.ஜே. ஜேசுதாஸ்
பாடல்வரிகள் - மு.மேத்தா