Showing posts with label சோகப் பாடல்கள். Show all posts
Showing posts with label சோகப் பாடல்கள். Show all posts

Sunday, July 22, 2018

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்


வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும்
தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா
யாரோடு யார் வந்தது நாம் போகும்போது
யாரோடு யார் செல்வது
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்


யாரார்க்கு என்ன வேஷமோ
இங்கே  யாரார்க்கு எந்த மேடையோ
ஆடும் வரைக் கூட்டம் வரும்
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
தாயாலே வந்தது தீயாலே வெந்தது
தாயாலே வந்தது தீயாலே வெந்தது
மெய் என்று மேனியை யார் சொன்னது
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பிறந்தாலும் பாலை ஊற்றுவார்
இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டால தான்
ஊர்போவது நாளால தான்
கருவோடு வந்தது தெருவோடு போவது
கருவோடு வந்தது தெருவோடு போவது
மெய் என்று மேனியை யார் சொன்னது
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்


நாடகம் விடும் நேரம்தான் உச்சக்காட்சி நடக்குதம்மா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

வேஷம் கலைக்கவும் ஓய்வு எடுக்கவும் வேளை நெருங்குதம்மா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா
தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை
நோய் கொண்டு போகும் நேரமம்மாDate, workOrderNumber, controller);

Tuesday, July 17, 2018

உச்சி வகுந்தெடுத்து ....


உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா

ஏ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரீராரீ ஆரீராரோ
ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ

பட்டில மாடு கட்டி பாலக் கறந்து வச்சா
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
அடி சின்னக் கண்ணு நானும் அத ஒத்துக்கல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க

வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க
கட்டுக் கத அத்தனயும் கட்டுக் கத
அத சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க

ஆனானனானனா ஏஏஏ னாஆஆ ஏஏஏ
னானானனானானானா ஏ

பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு
சங்கரய்யா தின்னதுன்னு சொன்னாங்க
சங்கரய்யா தின்னுருக்க நாயமில்ல
அடி சித்தகத்தி பூ விழியே நம்பவில்ல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா

குடகு மலை காற்றில் வரும் ...


குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
ஏதோ நினைவு தான் உன்ன சுத்தி பறக்குது
என்னோட மனசு தான் கண்டபடி தவிகிது
ஒத்த வழி என் வழி தானே மானே
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி

மானே மயிலே மரகத குயிலே
தேனே நான் பாடும் தேமாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில் கேட்டயோ என் வாக்கே
உன்ன எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்தனியாக நிக்கும் தேர் போல ஆனேன்
பூ பூத சோலையிலே பொன்னான மாலையிலே
நீ வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணு ரெண்டு
நீங்காத தாகம் கொண்டு
பாடும் பாட்டு
குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி
குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி

மறந்தால் தானே நெனைகனும் மாமா
நினைவே நீதானே நீ தன்னே
மனசும் மனசும் இணைந்ஜது மாமா
நெனச்சு தவிசேனே நான் தானே
சொல்லி விட்ட பாட்டு தேக்கு காதோட கேட்டேன்
தூது விட்ட ராசா மனம் தடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்ன என்ன ஒன்னாக நின்ன என்ன
உன் பேரை பாடி நிப்பேன் மாமா
தூங்காம உன்ன எண்ணி துடிசாளே இந்த கன்னி
வா மாமா


MovieKarakattakaranMusicIlaiyaraaja
Year1989LyricsGangai Amaran
SingersK. S. Chithra, Mano

Sunday, June 17, 2018

மலரே என்னென்ன கோலம்...



மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்

மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்

தினமும் வெவ்வேறு நிறமோ
இது தான் உன்னோடு அழகோ

மலரே என்னென்ன கோலம்
மலரே நலமா

வசந்தம் உன்னோடு சொந்தம்
உனக்கேன் என்னோடு பந்தம்

வசந்தம் உன்னோடு சொந்தம்
உனக்கேன் என்னோடு பந்தம்
வசந்தம் உன்னோடு சொந்தம்
உனக்கேன் என்னோடு பந்தம்

ஏழ்மையின் இலை உதிர் காலத்தில்
இங்கே பூ வேது காயேது
நினைத்தால் எட்டாத தூரம்
எனக்கேன் உன் மீது மோகம்

திருச் சபை ஏறிடும்
அர்ச்சனை மலரே
நீ எங்கே நான் இங்கே
திருச் சபை ஏறிடும்
அர்ச்சனை மலரே
நீ எங்கே நான் இங்கே

நீ எங்கே நான் இங்கே

மலரே என்னென்ன கோலம்
மலரே நலமா மலரே நலமா

நிலவை வானத்தில் பார்த்து
அருகே வாவென்று கேட்டு

நிலவை வானத்தில் பார்த்து
அருகே வாவென்று கேட்டு

அழுதிடும் குழந்தையின்
அம்புலி பருவம் என்னோடு
நான் கண்டேன்

இருக்கும் வர்கங்கள் ரெண்டு
உலகில் இப்போதும் உண்டு
சமவெளி மலைகளை
தழுவிட நினைத்தால்

சமவெளி மலைகளை
தழுவிட நினைத்தால்
வழியேது முடியாது
வழியேது முடியாது
வழியேது முடியாது
மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்
தினமும் வெவ்வேறு நிறமோ
இது தான் உன்னோடு அழகோ

மலரே என்னென்ன கோலம்



திரைப் படம்: ஆட்டோ ராஜா (1982)
குரல்: S P B
இசை: சங்கர் கணேஷ்
நடிப்பு: விஜயகாந்த், வனிதா
இயக்கம்: K விஜயன்