Sunday, January 20, 2019

மலரே என்னென்ன கோலம்!



மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்

மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்

தினமும் வெவ்வேறு நிறமோ
இது தான் உன்னோடு அழகோ

மலரே என்னென்ன கோலம்
மலரே நலமா

வசந்தம் உன்னோடு சொந்தம்
உனக்கேன் என்னோடு பந்தம்

வசந்தம் உன்னோடு சொந்தம்
உனக்கேன் என்னோடு பந்தம்
வசந்தம் உன்னோடு சொந்தம்
உனக்கேன் என்னோடு பந்தம்

ஏழ்மையின் இலை உதிர் காலத்தில்
இங்கே பூ வேது காயேது
நினைத்தால் எட்டாத தூரம்
எனக்கேன் உன் மீது மோகம்

திருச் சபை ஏறிடும்
அர்ச்சனை மலரே
நீ எங்கே நான் இங்கே
திருச் சபை ஏறிடும்
அர்ச்சனை மலரே
நீ எங்கே நான் இங்கே

நீ எங்கே நான் இங்கே

மலரே என்னென்ன கோலம்
மலரே நலமா மலரே நலமா

நிலவை வானத்தில் பார்த்து
அருகே வாவென்று கேட்டு

நிலவை வானத்தில் பார்த்து
அருகே வாவென்று கேட்டு

அழுதிடும் குழந்தையின்
அம்புலி பருவம் என்னோடு
நான் கண்டேன்

இருக்கும் வர்கங்கள் ரெண்டு
உலகில் இப்போதும் உண்டு
சமவெளி மலைகளை
தழுவிட நினைத்தால்

சமவெளி மலைகளை
தழுவிட நினைத்தால்
வழியேது முடியாது
வழியேது முடியாது
வழியேது முடியாது
மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்
தினமும் வெவ்வேறு நிறமோ
இது தான் உன்னோடு அழகோ

மலரே என்னென்ன கோலம்

திரைப் படம்: ஆட்டோ ராஜா (1982)
குரல்: S P B
இசை: சங்கர் கணேஷ்
நடிப்பு: விஜயகாந்த், வனிதா
இயக்கம்: K விஜயன்

இரவிங்கு தீவாய் நமை சூழுதே!!



இரவிங்கு தீவாய் நமை சூழுதே!!
விடியலும் இருளாய் வருதே!!
நினைவுகள் தீயாய் அலை மோதுதே!!
உடலிங்கு சாவாய் அழுதே!

பிரிவே உறவாய் கரைந்து போகிறேன்!
உயிரின் உயிரை பிரிந்து போகிறேன்!

மலைகளின் நதிபோல் மனம் வழிந்து வந்தாய்!!
வறண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய்!!
கனவே துணையாய் ஒழிந்து போகட்டும்...

இரவிங்கு தீவாய் நமை சூழுதே!!
விடியலும் இருளாய் வருதே!!

இந்த தாமரைக்குளம் நீர் தனி ஆகுதே!
அதன் சூரியன் பகல் இன்றி வெயில் காயிதே!!
ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே!!
அட, காலங்கள் தடைமீறி, தடை போடுதே!

நீ இன்றி நானே
தினம் வாழ்வதொரு வாழ்வா?!
வாழ்வே வா நீ தான் உயிரின் உயிரே!
வரவா?!… வர வா?!…
தினம் தினம் உயிர்த்தெழும்
மனம் அன்றாடம் மாயுமே!
உயிர்வரை நிறைந்து துணை
மனம் கொண்டாடி வாழுமே!

மரங்கள் சாய்ந்து
கூடு வீழ்ந்தும் குயில்கள் ராகம் பாடுமே
இரவு தீர்ந்து ஓய்ந்த போதும்
நிலவு பொறுமை காக்குமே!

மழை வழி கடல் விடும்
வின்காதல் மண்ணை செருமமே
உனை உடல் பிரிந்தினும்
என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே!!
நீ போய் வா!!
வா!! வா!!
வா!!