Sunday, March 31, 2019

அமைதியான நதியினிலே ஓடும்

அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்

அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்



தென்னம் இளங்கீற்றினிலே...ஏ..ஏ..ஏ
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது

அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்



ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமனம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமனம் வீழ்வதில்லை

அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம்
ஓ ஓ ஓ......
அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது

அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்



அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்துவிடும்
அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்துவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்

அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.


படம்:- ஆண்டவன் கட்டளை - 1964;
இசை:- விஸ்வநாதன், ராமமூர்த்தி;
பாடல் வரிகள்:- கண்ணதாசன்;
குரல்:- சௌந்தர்ராஜன், சுசிலா,
நடிப்பு:- சிவாஜி கணேசன் & தேவிகா.



Wednesday, March 27, 2019

வைகைக்கரை காற்றே நில்லு

வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கைதனைத் தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

(வைகைக் கரை)

திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கண்ணிவிடும்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ
சோகமது நீங்காதோ
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

(வைகைக் கரை காற்றே நில்லு)

திரைப்படம் : உயிருள்ளவரை உஷா
இசை: டி. ராஜேந்தர்
பாடியவர் : கே.ஜே. ஏசுதாஸ்


இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை ..

படம் - துள்ளாத மனமும் துள்ளும் வரிகள் - வைரமுத்து குரல் - உன்னி கிருஷ்ணன் இசை - எஸ்.ஏ.ராஜ்குமார்

இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை ..
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை ..
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே ..
ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதிலேயே ..
இந்த வாழ்கயே ஒரு தேடல் தான் ..
அதை தேடி தேடி தேடும் மனசு தொலைகிறதே ..

கண் இல்லை என்றாலோ நிறம் பார்க்கமுடியாது ..
நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்க முடியாது ..
குயில் இசை போதுமே அட குயில் முகம் தேவையா ?
உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா ?
கண்ணில் காட்சி தோன்றி விட்டால் கற்பனை தீர்ந்துவிடும் ..
கண்ணில் தோன்ற காட்சி என்றால் கற்பனை வளந்து விடும் ..
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே ..

இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை ..
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை ..


அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்…

திரைப்படம்: முதல் மரியாதை (1985)
பாடியவர்: இளையராஜா & சித்ரா
வரிகள்: வைரமுத்து
இசை: இளையராஜா

அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக

செவிலி…..

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக (2)

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்(2)

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக…

மல்லு வேட்டி கட்டி இருக்கு
அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு

முத்தழகி கட்டிபிடிச்சு முத்தம் குடுக்க
 மஞ்ச வந்து ஒட்டிகிருச்சி

மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு

ஏதுடா வம்பா போச்சி லவுக்கையும் கெடயாது

சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை

பூவு ஒன்னு காண்ணடிச்சா வண்டு வரும் பின்னால

எக்கு தப்பு வேணாம் ம்ம்..

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்(2)

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்.. என் ராசாத்திக்காக..

ரத்தினமே முத்தம் வைக்கவா
அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா
வெக்கதையும் ஒத்தி வைக்கவா
அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா
ஓடிவா ஓடை பக்கம் ஒளியலாம் மெதுவாக
அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாங்க
காத்தடிச்சா தாங்காதடி மல்லிகப்பூ மாராப்பு
கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு
போடி புள்ள எல்லாம் டூப்பு….

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக (2)


பூங்காற்று திரும்புமா?


படம்: முதல் மரியாதை
இசை: இளையராஜா
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: மலேசியா வாசுதேவன், ஜானகி

பூங்காற்று திரும்புமா?
என் பாட்ட விரும்புமா?
பாராட்ட* மடியில் வெச்சுத் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா?

(பூங்காற்று திரும்புமா…)

ராசாவே வருத்தமா?
ஆகாயம் சுருங்குமா?
ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா?

என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல

ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
சொல்லாத சோகத்த சொன்னேனடி

சொக ரக சோகந்தானே

யாரது போரது?

குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

(பூங்காற்று திரும்புமா…)

உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறணும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்

மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே

எசப் பாட்டு படிச்சேன் நானே

பூங்குயில் யாரது?

கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க

அடி நீதானா அந்தக் குயில்?
யார் வீட்டு சொந்தக் குயில்?
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே

நாந்தானே அந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகம் தான் மறந்ததா?


வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்

முதல் மரியாதை
படம்: முதல் மரியாதை
இசை: இளையராஜா
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: மலேசியா வாசுதேவன், S.ஜானகி

வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்

பச்சைக்கிளியோ தொட்டுக்கிருச்சு
இச்சைக்கிளியோ ஒத்துக்கிருச்சு
வச்ச நெருப்பு தொட்டுக்கிருச்சு
பச்ச மனசு பத்திக்கிருச்சு
கைய கட்டி நிக்கச்சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது
சாமிகிட்ட கேளு யாரு போட்ட கோடு
பஞ்சுக்குள்ள தீய வச்சு பொத்தி வச்சவுக யாரு

வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்

ஒன்னக்கண்டு நான் சொக்கி நிக்கிறேன்
கண்ணுக்குள்ள நான் தண்ணி வைக்கிறேன்
சொல்லாமத்தான் தத்தளிக்கிறேன்
தாளமத்தான் தள்ளி நிக்கிறேன்
பாசம் உள்ள தர்மம் இத பாவமின்னு சொல்லாது
குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வைக்கக்கூடாது
புத்தி கெட்ட தேசம் பொடி வச்சு பேசும்
சாதிமத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்

வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்



மாலை சூடும் வேளை

ஆ..ஆ.ஆ..ஆ..ஆஆஆஆ

எஸ்.பி.பாலு:
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
இன்ப மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கண்ணம் உண்டு
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை

எஸ்.ஜானகி:
காயும் வெயில் காலம்
பாயும் மழை நீயும்
காயும் வெயில் காலம்
பாயும் மழை நீயும்

எஸ்.பி.பாலு:
கோடையில் நான் ஓடை தானே
வாடையில் நான் போர்வை தானே
கோடையில் நான் ஓடை தானே
வாடையில் நான் போர்வை தானே


எஸ்.ஜானகி:
நீ கொஞ்ச நான் கெஞ்ச
வேதங்கள் இன்பம்

எஸ்.பி.பாலு:
நீண்ட நேரம் தோன்றுமோ

எஸ்.ஜானகி:
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கண்ணம் உண்டு
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை

சோலை மஞ்சள் சேலை
கூடும் அன்பின் வேளை
சோலை மஞ்சள் சேலை
கூடும் அன்பின் வேளை

எஸ்.பி.பாலு:
மாங்கனியாய் நீ குலுங்க
ஆண் கிளியாய் நான் நெருங்க
மாங்கனியாய் நீ குலுங்க
ஆண் கிளியாய் நான் நெருங்க

எஸ்.ஜானகி:
அம்மம்மா அப்பப்பா என்னாகும் தேகம்

எஸ்.பி.பாலு:
ஆடை கொண்டு மூடுமோ

எஸ்.ஜானகி:
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை

எஸ்.பி.பாலு:
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கண்ணம் உண்டு

எஸ்.பி.பாலு: எஸ்.ஜானகி:
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை..



தாலாட்டுதே...

தாலாட்டுதே...
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
காணாமல் மடி மீது தார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம் - தாலாட்டுதே...

அலை மீதில் ஆடும் உள்ளம் எங்கும் ஒரே தாகம்
நிலை மீறி ஆடும் மீன்கள் ரெண்டும் ஒரே கோலம்

மேல்வானத்தில் ஒரு நட்சத்ரம்
கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்
எண்ணம் ஒரு வேகம் அதில் உள்ளம் தரும் நாதம்

தாலாட்டுதே...
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
காணாமல் மடி மீது தார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்

இரு கண்கள் மோதி செல்லும் போதும் ஒரே எண்ணம்
ஒரு சங்கில் தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன்
சொர்கத்திலே இது முடிவானது
சொர்க்கம் என்றே இது முடிவானது
காதல் ஒரு வேதம் அது தெய்வம் தரும் கீதம்

தாலாட்டுதே...
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
காணாமல் மடி மீது தார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம் - தாலாட்டுதே...


தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ?

நான் கேட்டு தாய்தந்தை படைதானா
இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்ரால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..)

வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்
உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்
கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன
இதில் தாய் என்ன மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..)

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மன்னைத் தோண்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோண்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உன்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..)




ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்



ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

நீல வான ஓடையில்

நீல வான ஓடையில்
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா

காளிதாசன் பாடினான் மேகதூதமே
தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
நீயில்லையேல் நானில்லையே
ஊடல் ஏன் கூடும் நேரம்

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி

நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
ஸ்ரீதேவியே என் ஆவியே
எங்கே நீ அங்கே நான்தான்

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா

நினைக்கத் தெரிந்த மனமே

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா

(நினைக்கத்)

மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா
மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா
அன்பே மறையத் தெரியாதா

(நினைக்கத்)

எடுக்கத் தெரிந்த கரமே உனக்கு கொடுக்கத் தெரியாதா
இனிக்கத் தெரிந்த கனியே உனக்கு கசக்கத் தெரியாதா
படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்கத் தெரியாதா
படரத் தெரிந்த பனியே உனக்கு மறையத் தெரியாதா
பனியே மறையத் தெரியாதா

(நினைக்கத்)

கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா
பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா
இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா

(நினைக்கத்)


செந்தாழம் பூவில்...

செந்தாழம் பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து வ்ளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

செந்தாழ்ம்பூவில்

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சில உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

செந்தாழம்பூவில்


இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளெ வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

செந்தாழம்பூவில்


பூங்கதவே தாள் திறவாய்

பூங்கதவே தாள் திறவாய்
பூங்கதவே தாள் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்

நீரோட்டம் போலோடும்
ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆகா கா ஆனந்தம்
ஆடும் நினைவுகள் பூவாகும்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய தாகம்..ம்ம்.

(பூங்கதவே தாள்)

திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் மங்கையிடம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்.


(பூங்கதவே தாள்)


என் இனிய பொன் நிலாவே


என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் ....
தொடருதே தினம் தினம் ....

பன்னீரைத் தூவும் மழை ஜில்லேன்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னொரமே
வென்னிலா வானில் அதில் என்னென்ன மேகம்
ஊர்கோளம் போகும் அதில் உண்டாகும் ராகம்
புரியாதோ என் எண்ணமே
அன்பே.....


பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே
பூவான கோலங்களே
தென் காற்றின் பிம்பங்களே தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்
கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்
இது தானே என் ஆசைகள்
அன்பே....

ஒரு தெய்வம் தந்த பூவே

ஒரு தெய்வம் தந்த பூவே
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!
காற்றைப் போல நீ வந்தாயே!
சுவாசமாக நீ நின்றாயே!
மார்பில் ஊறும் உயிரே!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!
காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!
மரணம் மீண்ட ஜனனம் நீ!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது செல்வம் நீ! எனது வறுமை நீ!
இழைத்த கவிதை நீ! எழுத்துப் பிழையும் நீ!
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!
காற்றைப் போல் நீ வந்தாயே!
சுவாசமாய் நீ நின்றாயே!
மார்பில் ஊறும் உயிரே!