Monday, July 23, 2018

சட்டி சுட்டதடா கை விட்டதடா....


சட்டி சுட்டதடா கை விட்டதடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா
(சட்டி …)

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா
(சட்டி …)

ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா
(சட்டி …)

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா – நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
(சட்டி …)


ovieAalayamaniMusicViswanathan Ramamoorthy
Year1962LyricsKannadasan
SingersT. M. Soundararajan

11 comments:

  1. கண்ணதாசன் கண்ணதாசனே 👍🏻👍🏻👍🏻

    ReplyDelete
  2. நெஞ்சை நெருடல் பாடல்

    ReplyDelete
  3. வாழ்வில் இந்த சுவடை அடையாதார் யாருமில்லை !

    ReplyDelete
  4. எவ்வளவு தத்துவங்கள் அடடடா

    ReplyDelete
  5. அருமையான பாடல்

    ReplyDelete
  6. சூப்பர்

    ReplyDelete
  7. கடைசி வரிகள் "இதயத் தோலை உரித்து பார்க்க"(இதய உறை= மேல்மனம்=Pericardium), பிறக்கும் முன்னே இருந்த உள்ளம்( வெற்று நிலை=கல்லீரல் சுழி),இவை அருமையான வை- அக்குபஞ்சர் ஆசான் ஆ மதியழகன் 🔔☯️

    ReplyDelete