Sunday, March 20, 2022

போவோமா ஊர்கோலம்

படம் : சின்ன தம்பி

பாடல் : போவோமா

இசை : இளையராஜா

பாடலாசிரியர்: கங்கை அமரன்

பாடியவர்கள் : SP பால சுப்ரமணியம், சுவர்ணலதா


போவோமா ஊர்கோலம்

பூலோகம் எங்கெங்கும்

ஒடும் பொன்னி ஆறும்

பாடும் கானம் நூறும்

காலம் யாவும் பேர் இன்பம்

காணும் நேரம் ஆனந்தம்


போவோமா ஊர்கோலம்

பூலோகம் எங்கெங்கும்

அரமண அன்னக்கிளி தரையில நடப்பது நடுக்குமா அடுக்குமா

பனியிலும் வெட்டவெளி வெயிலிலும் உள்ளசுகம் அரண்மண கொடுக்குமா

குளுகுளு அரையிலே கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்து குடிசைய விரும்புமா

சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா

பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு

வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு

அதிசயமான பெண்தானே

புதுசுகம் தேடி வந்தேனே


போவோமா ஊர்கோலம்

பூலோகம் எங்கெங்கும்

ஒடும் பொன்னி ஆறும்

பாடும் கானம் நூறும்

காலம் யாவும் பேர் இன்பம்

காணும் நேரம் ஆனந்தம்


போவோமா ஊர்கோலம்

பூலோகம் எங்கெங்கும்

கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம்

கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்

ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடு

நதியிலே

உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொன்னும் புரியல்லே

கவிதை பாடும் காவேரி ஜதிய சேத்து ஆடும்

அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்


போதும் போதும் ஒம் பாட்டு

பொறப்படப் போறேன் நிப்பாட்டு

போவோமா ஊர்கோலம்

பூலோகம் எங்கெங்கும்

போற்றிப் பாடடி பொன்னே…

படம் : தேவர் மகன்

பாடல் : போற்றிப் பாடடி

இசை : இளையராஜா

பாடலாசிரியர்: வாலி

பாடியவர்கள் : இளையராஜா, எஸ்.பி.பால சுப்ரமணியம்


போற்றிப் பாடடி பொன்னே…

தேவர் காலடி மண்ணே….

தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோ…

முக்குலத்த சேர்ந்த தேவர் மகந்தான் ஹோ…


போற்றிப் பாடடி பொன்னே…

தேவர் காலடி மண்ணே….

என்ன சொல்ல மண்ணு வளம்….

டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டோ…

மாத்தவங்க கண்ணு படும்

டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டோ…

என்ன சொல்ல மண்ணு வளம்

மாத்தவங்க கண்ணு படும்

அந்த கதை இப்ப உள்ள

சந்ததிங்க கேட்க வேணும்


நம் உயிர்க்கு மேல மானம் மரியாதை

மானம் இழந்தாலே வாழ தெரியாதே

பெரிசல்லாம் சொன்னாங்க சொன்னபடி நின்னாங்க

குணத்தால் மனத்தால் கலை மான் ஆனாங்க

—-


போற்றிப் பாடடி பொன்னே…

தேவர் காலடி மண்ணே….

தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோ…

முக்குலத்த சேர்ந்த தேவர் மகந்தான் ஹோ…


போற்றிப் பாடடி பொன்னே…

தேவர் காலடி மண்ணே….


முன்னோருக்கு முன்னோரெல்லாம்…..

டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டோ…

இன்னாருன்னு கண்டு கொள்ள

டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டிங்க் டாங்க் டோ…

முன்னோருக்கு முன்னோரெல்லாம்

இன்னாருன்னு கண்டு கொள்ள

ஏடெடுத்து எழுதி சொல்ல

ஒன்னு ரெண்டு மூணு அல்ல


முக்குலத்தோர் கல்யாணந்தேன்

முத்து முத்து கம்பளந்தேன்

எக்குலமும் வாழ்த்து சொல்லும்

எங்களுக்கு எக்காலந்தேன்

அழகான சரிஜோடி ஆணைமேல அம்பாரி


கணக்கா வழக்கா கடல்போல் ஏராளம்



போற்றிப் பாடடி பொன்னே…

தேவர் காலடி மண்ணே….

தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோ…

முக்குலத்த சேர்ந்த தேவர் மகந்தான் ஹோ…



போற்றிப் பாடடி பொன்னே…

தேவர் காலடி மண்ணே….

Thursday, March 17, 2022

காட்டுக்குயிலு மனசுக்குள்ள.....

படம் : தளபதி

பாடல் : காட்டுக்குயிலு

இசை : இளையராஜா

பாடலாசிரியர்: வாலி

பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.யேசுதாஸ்


காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்

தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்


காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்

தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்


எல்லோரும் மொத்தத்திலே

சந்தோச தெப்பத்திலே

தள்ளாடும் நேரத்திலே

உல்லாச நெஞ்சத்திலே


காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்

தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்

போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசையெல்லாம் சுட்டுத்தள்ளு

புதுசா இப்பப் பொறந்தோமுன்னு என்னிக்கொள்ளடா டோய்


பயணம் எங்கே போனாலென்ன பாதை நூறு ஆனாலென்ன

தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா டோய்


ஊதக் காத்து வீச ஒடம்புக்குள்ள கூச

குப்ப கூளம் பத்தவச்சுக் காயலாம்


தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை

பொங்கப் பான வெல்லம் போலப் பாயலாம்


அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு

அத்தனையும் தித்திக்கிர நாள்தான் ஹோய்


காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்

தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்


எல்லோரும் மொத்தத்திலே

சந்தோச தெப்பத்திலே

தள்ளாடும் நேரத்திலே

உல்லாச நெஞ்சத்திலே


காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்

தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்

பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன

உறவுக்கெல்லாம் கவலப்பட்ட ஜென்மம் நானில்ல


பாசம் வெக்க நேசம் வெக்க தோழன் உண்டு வாழவெக்க

அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே


உள்ளமட்டும் நானே என் உசிரக் கூடத்தானே

என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்

என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு

நட்பைக் கூடக் கற்பைப் போல என்னுவேன்


சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகம் இட்டுத் தாளம் இட்டுப்

பாட்டுப் பாடும் வானம்பாடி நான் தான் ஹோய்

காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்

தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்


எல்லோரும் மொத்தத்திலே

சந்தோச தெப்பத்திலே

தள்ளாடும் நேரத்திலே

உல்லாச நெஞ்சத்திலே


காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்

தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்

என்னை தாலாட்ட வருவாளோ..

 படம் : காதலுக்கு மரியாதை

பாடல் : என்னை தாலாட்ட

இசை : இளையராஜா

பாடலாசிரியர்: பழனி பாரதி

பாடியவர்கள் : ஹரிஹரன்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ

தங்க தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ

தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா

மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா

கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே


என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ

தங்க தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ


பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்

ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்

ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்

இரவும் பகலும் என்னை வாட்டினாள்

இதயம் அவள் பெயரில் மாற்றினாள்

காதல் தீயை வந்து மூட்டினாள்

நான் கேட்கும் பதில் இன்று வாராதா

நான் தூங்க மடி ஒன்று தாராதா

தாகங்கள் தாபங்கள் தீராதா

தாளங்கள் ராகங்கள் சேராதா

வழியோரம் விழி வைக்கிறேன்


எனது இரவு அவள் கூந்தலில்

எனது பகல்கள் அவள் பார்வையில்

காலம் எல்லாம் அவள் காதலில்

கனவு கலையவில்லை கண்களில்

இதயம் துடிக்கவில்லை ஆசையில்

வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில்

கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்

நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்

நாளைக்கு நான் காண வருவாளோ

பாலைக்கு நீரூற்றி போவாளோ

வழியோரம் விழி வைக்கிறேன்


என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ

தங்க தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ

தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா

மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா

கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே


என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ

தங்க தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ

அடி ஆத்தாடி…

 படம் : கடலோரகவிதைகள்

பாடல் : அடி ஆத்தாடி.

இசை : இளையராஜா

பாடலாசிரியர்: பங்காரா

பாடியவர்கள் : இளையராஜா, எஸ்.ஜானகி

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


அடி ஆத்தாடி…

அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே

சரிதானா

அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே

அதுதானா


உயிரோடு


உறவாடும்


ஒரு கோடி ஆனந்தம்


இவன் மேகம் ஆக யாரோ காரணம்


அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே

சரிதானா

அடி அம்மாடி

மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ

ஒன்ன பார்த்து அலைகள் எல்லாம் மெட்டு கட்டி பாடாதோ


இப்படி நான் ஆனதில்ல

புத்தி மாறிப் போனதில்ல

முன்ன பின்ன நேர்ந்ததில்ல

மூக்கு நுனி வேர்த்ததில்ல


கன்னிப்பொன்னு கண்ணுக்குள்ள கத்திச்சண்ட கண்டாயோ

படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ

இசை கேட்டாயோ …

தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம்

உண்ம சொல்லு பொன்னே என்னை, என்ன செய்ய உத்தேசம்


வார்த்த ஒன்னு வாய்வரைக்கும் வந்துவந்து போவதென்ன

கட்டுமரம் பூப்பூக்க ஆசப்பட்டு ஆவதென்ன


கட்டுத்தறி காள நானே கன்னுக்குட்டி ஆனேனே

தொட்டுத்தொட்டு தென்றல் பேச தூக்கங்கெட்டுப் போனேனே

சொல் பொன்மானே …

அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே

சரிதானா

அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே

அதுதானா


உயிரோடு


உறவாடும்


ஒரு கோடி ஆனந்தம்


இவன் மேகம் ஆக யாரோ காரணம்


அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே

சரிதானா


அடி ஆத்தாடி.....

Wednesday, March 16, 2022

தாயில்லாமல் நானில்லை...

  

பாடியவர் : டி.எம் .எஸ்

திரைப்படம் :அடிமைப்பெண்

பாடல் வரிகள்: கவிஞர் ஆலங்குடி சோமு


தாயில்லாமல் நானில்லை

தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னை காக்கின்றாள்


ஜீவநதியாய் வருவாள்

என் தாகம் தீர்த்து மகிழ்வாள்

தவறினைப் பொறுப்பாள்

தர்மத்தை வளர்ப்பாள்

தரணியிலே வளம் சேர்த்திடுவாள்

தாயில்லாமல் நானில்லை


தூய நிலமாய் கிடப்பாள்

தன் தோளில் என்னை சுமப்பாள்

தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்

தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்


தாயில்லாமல் நானில்லை


மேக வீதியில் நடப்பாள்

உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்

மலைமுடி தொடுவாள், மலர்மணம் தருவாள்

மங்கள வாழ்வுக்கு துணையிருப்பாள்

தாயில்லாமல் நானில்லை


ஆதி அந்தமும் அவள்தான்

நம்மை ஆளும் நீதியும் அவள்தான்


அகந்தையை அழிப்பாள்

ஆற்றல் கொடுப்பாள்

அவள்தான் அன்னை மகா சக்தி

அந்த தாயில்லாமல் நானில்லை

தானே எவரும் பிறந்ததில்லை

என்க்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னை காக்கின்றாள்...

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

படம் : மன்னன் (1992)

பாடல் வரிகள்: கவி. வாலி

இசை: ராக தேவன் இளையராஜா

இயக்குனர் : பி.வாசு


அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே (2)

நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி

வேறொன்று ஏது ?….

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே


அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி

திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா

அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்

புரிகின்ற சிறு தொண்டன் நான் தானம்மா

பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்

அருள் வேண்டும் அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே

அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்

மகனாக பிறக்கின்ற வரம் வேண்டுமே

அதை நீயே தருவாயே


அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே


பசுந்தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்

அவையாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா ?

விலை மீது விலை வைத்து கேட்டாலும் கொடுத்தாலும்

கடை தன்னில் தாய் அன்பு கிடைக்காதம்மா ?

ஈரைந்து மாதங்கள் கருவோடு எனை தாங்கி நீ பட்ட

பெரும்பாடு அறிவேன்னம்மா …

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் முளைத்தாலும்

உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா ?

உன்னாலே பிறந்தேனே …


அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே

நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி

வேறொன்று ஏது ?….

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே..

 படம்: தென்மேற்குப் பருவக்காற்று

பாடலாசிரியர்: வைரமுத்து

இசை: என்.ஆர்.ரகுநந்தன்

பாடியவர்: விஜய் பிரகாஷ்


கள்ளிக்காட்டில் பிறந்த தாயே

என்ன கல்லுடைச்சி  வளர்த்த நீயே

முள்ளுக்காட்டில் முளைச்ச தாயே

என்ன முள்ளு தைக்க விடல நீயே


காடைக்கும் காட்டு குருவிக்கும்

எந்த புதரிலும் இடமுண்டு...

கொடைக்கும் அடிக்கும் குளிருக்கும்

தாயி ஒதுங்கதான் இடமுண்டா.


கரட்டு மேட்டையே  மாத்துனா அவ

கல்ல புழிஞ்சி கஞ்சி ஊத்துனா  (2)


கள்ளிக்காட்டில் பிறந்த தாயே

என்ன கல்லுடைச்சி  வளர்த்த நீயே

முள்ளுக்காட்டில் முளைச்ச தாயே

என்ன முள்ளு தைக்க விடல நீயே


உளவு காட்டுல வெத  வெதப்பா

ஒணாகரட்டுல  கூல் குடிப்பா

வாரன்-குழாயில் கை துடைப்பா

பாவமப்பா  .....


வெளி முள்ளில் அவ விறகெடுப்பா

நாழி அரிசி வச்சு ஒலை அரிப்பா

புள்ள உண்ட மிச்சம் உண்டு

உசுர்  வளர்ப்பா தியாகமப்பா  ...


கிழக்கு விடியும் முன்ன முளிக்குரா

அவ உலக்கை  பிடிச்சுதான் தேறக்குறா

மண்ண கிண்டிதான் பொழைக்குறா

உடல் மைக்கைபோக  மட்டும் உழைக்குறா


கள்ளிக்காட்டில் பிறந்த தாயே

என்ன கல்லுடைச்சி  வளர்த்த நீயே


தங்கம் தனி தங்கம் மாசு-இல்ல

தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல

தாய்வழி சொந்தம் போல பாசமில்ல

நேசமில்ல


தாயி கையில் என்ன மந்திரமா

கேப்பைக்கழியில் ஒரு நெய் ஒழுகும்

காஞ்ச கருவாடு தேன் ஒழுகும்

அவ சமைக்கயில ..


சொந்தம் நூறு சொந்தம் இருக்குது

பெத்த தாய் போல ஒன்னு நிலைக்குதா

சாமி நூறு சாமி இருக்குது

தாயி ரெண்டு தாயி இருக்குதா


கள்ளிக்காட்டில் பிறந்த தாயே

என்ன கல்லுடைச்சி  வளர்த்த நீயே

கண்கள் நீயே... காற்றும் நீயே

திரைப்படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடியவர்: சித்ரா
இசை:  G.V. பிரகாஷ்
வரிகள்: தாமரை


கண்கள் நீயே... காற்றும் நீயே

தூணும் நீ... துரும்பில் நீ

வண்ணம் நீயே... வானும் நீயே

ஊனும் நீ... உயிரும் நீ


பல நாள் கனவே

ஒரு நாள் நனவே

ஏக்கங்கள் தீர்த்தாயே!


எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்

நான் தான் நீ வேறில்லை

முகம் வெள்ளை தாள்

அதில் முத்தத்தால்

ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே

இதழ் எச்சில் நீர்

எனும் தீர்த்ததால்

அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே


கண்கள் நீயே... காற்றும் நீயே

தூணும் நீ... துரும்பில் நீ

வண்ணம் நீயே... வானும் நீயே

ஊனும் நீ... உயிரும் நீ


இந்த நிமிடம் நீயும் வளர்ந்து

என்னைத்தாங்க ஏங்கினேன்

அடுத்தக்கணமே குழந்தையாக

என்றும் இருக்க வேண்டினேன்


தோளில் ஆடும் சேலை

தொட்டில் தான் பாதிவேளை

சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ

இசையாக பலபல ஓசை செய்திடும்

இராவணன் ஈடில்லா என்மகன்


எனைத்தள்ளும் முன்

குழி கன்னத்தில்

என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே

எனைக்கிள்ளும் முன்

விரல் மெத்தைக்குள்

என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே


என்னை விட்டு இரண்டு எட்டு

தள்ளிப் போனால் தவிக்கிறேன்

மீண்டும் உன்னை அள்ளி எடுத்து

கருவில் வைக்க நினைக்கிறேன்

போகும் பாதை நீளம்

கூரையாய் நீல வானம்


பலநூறு மொழிகளில் பேசும்முதல் மேதை நீ

பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ

நான் கொள்ளும் கர்வம் நீ


கடல் ஐந்தாறு மலை ஐநூறு

இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை

உடல் செவ்வாது பிணி ஒவ்வாது

பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை


கண்கள் நீயே... காற்றும் நீயே

தூணும் நீ... துரும்பில் நீ

வண்ணம் நீயே... வானும் நீயே

ஊனும் நீ... உயிரும் நீ