மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!
தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள்!
மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!
தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள்!
ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர்!
ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்!
ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்!
மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!
மதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி
வதம் செய்யும் ஆட்சி தன்னை..
உதைத்திட எழுந்ததீரர் சிதைந்தது மானம் என்றால்
சினந்திடும் வீரவான்கள்..
உதைத்திட எழுந்த தீரர் சிதைந்தது மானம் என்றால்
சினந்திடும் வீரவான்கள்....
சுதந்திரம் உயிர் மூச்சென்றே துணிந்தெழும் ஞானவான்கள்!
துணிந்தெழும் ஞானவான்கள்!
(மாவீரர்....)
தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள்
வீசிய இளம் தென்றல்கள்!
விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும்
விடுதலை ஆண்பெண் பொன்கள்!
தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள்
வீசிய இளம் தென்றல்கள்!
விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும்
விடுதலை ஆண்பெண் பொன்கள்!
பற்றுகோடாகி எங்கள் பலமாகி நிற்கும் தூண்கள்!
பலமாகி நிற்கும் தூண்கள்!
No comments:
Post a Comment