Monday, June 18, 2018

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....


நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை
நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றும் இல்லை

முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை
நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றும் இல்லை

ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது

ஒருவர் மட்டும் குடியிருந்தால்
துன்பம் ஏதும் இல்லை
ஒன்று இருக்க ஒன்று வந்தால்
என்றும் அமைதி இல்லை

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை
நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றும் இல்லை

எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது

பாதையெல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்து விடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்து விடும்

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லம்
நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றும் இல்லை

6 comments:

  1. அருமை

    ReplyDelete
  2. ஆம் இந்த பாடல், நடித்த முத்துராமன், தேவிகா ,படம், கண்ணதாசன் யாரையும், இன்றைய காலத்தால் நினைவில் இருந்து அழியாது.

    ReplyDelete
  3. மிகவும் அருமையான பாடல்.

    ReplyDelete
  4. நல்ல கருத்துள்ள பாடல்

    ReplyDelete
  5. நல்ல கருத்துள்ள பாடல்

    ReplyDelete
  6. பாதையெல்லாம் மாறி வரும்
    பயணம் முடிந்து விடும்
    மாறுவதைப் புரிந்து கொண்டால்
    மயக்கம் தெளிந்து விடும்


    Last 2 lines are so clear. Clearly said... So nice. Hats off to கண்ணதாசன்.... ஜீனியஸ்

    ReplyDelete