Sunday, January 20, 2019

இரவிங்கு தீவாய் நமை சூழுதே!!



இரவிங்கு தீவாய் நமை சூழுதே!!
விடியலும் இருளாய் வருதே!!
நினைவுகள் தீயாய் அலை மோதுதே!!
உடலிங்கு சாவாய் அழுதே!

பிரிவே உறவாய் கரைந்து போகிறேன்!
உயிரின் உயிரை பிரிந்து போகிறேன்!

மலைகளின் நதிபோல் மனம் வழிந்து வந்தாய்!!
வறண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய்!!
கனவே துணையாய் ஒழிந்து போகட்டும்...

இரவிங்கு தீவாய் நமை சூழுதே!!
விடியலும் இருளாய் வருதே!!

இந்த தாமரைக்குளம் நீர் தனி ஆகுதே!
அதன் சூரியன் பகல் இன்றி வெயில் காயிதே!!
ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே!!
அட, காலங்கள் தடைமீறி, தடை போடுதே!

நீ இன்றி நானே
தினம் வாழ்வதொரு வாழ்வா?!
வாழ்வே வா நீ தான் உயிரின் உயிரே!
வரவா?!… வர வா?!…
தினம் தினம் உயிர்த்தெழும்
மனம் அன்றாடம் மாயுமே!
உயிர்வரை நிறைந்து துணை
மனம் கொண்டாடி வாழுமே!

மரங்கள் சாய்ந்து
கூடு வீழ்ந்தும் குயில்கள் ராகம் பாடுமே
இரவு தீர்ந்து ஓய்ந்த போதும்
நிலவு பொறுமை காக்குமே!

மழை வழி கடல் விடும்
வின்காதல் மண்ணை செருமமே
உனை உடல் பிரிந்தினும்
என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே!!
நீ போய் வா!!
வா!! வா!!
வா!!

No comments:

Post a Comment