Wednesday, March 16, 2022

தாயில்லாமல் நானில்லை...

  

பாடியவர் : டி.எம் .எஸ்

திரைப்படம் :அடிமைப்பெண்

பாடல் வரிகள்: கவிஞர் ஆலங்குடி சோமு


தாயில்லாமல் நானில்லை

தானே எவரும் பிறந்ததில்லை

எனக்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னை காக்கின்றாள்


ஜீவநதியாய் வருவாள்

என் தாகம் தீர்த்து மகிழ்வாள்

தவறினைப் பொறுப்பாள்

தர்மத்தை வளர்ப்பாள்

தரணியிலே வளம் சேர்த்திடுவாள்

தாயில்லாமல் நானில்லை


தூய நிலமாய் கிடப்பாள்

தன் தோளில் என்னை சுமப்பாள்

தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்

தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்


தாயில்லாமல் நானில்லை


மேக வீதியில் நடப்பாள்

உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்

மலைமுடி தொடுவாள், மலர்மணம் தருவாள்

மங்கள வாழ்வுக்கு துணையிருப்பாள்

தாயில்லாமல் நானில்லை


ஆதி அந்தமும் அவள்தான்

நம்மை ஆளும் நீதியும் அவள்தான்


அகந்தையை அழிப்பாள்

ஆற்றல் கொடுப்பாள்

அவள்தான் அன்னை மகா சக்தி

அந்த தாயில்லாமல் நானில்லை

தானே எவரும் பிறந்ததில்லை

என்க்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னை காக்கின்றாள்...

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

படம் : மன்னன் (1992)

பாடல் வரிகள்: கவி. வாலி

இசை: ராக தேவன் இளையராஜா

இயக்குனர் : பி.வாசு


அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே (2)

நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி

வேறொன்று ஏது ?….

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே


அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி

திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா

அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்

புரிகின்ற சிறு தொண்டன் நான் தானம்மா

பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்

அருள் வேண்டும் அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே

அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்

மகனாக பிறக்கின்ற வரம் வேண்டுமே

அதை நீயே தருவாயே


அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே


பசுந்தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்

அவையாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா ?

விலை மீது விலை வைத்து கேட்டாலும் கொடுத்தாலும்

கடை தன்னில் தாய் அன்பு கிடைக்காதம்மா ?

ஈரைந்து மாதங்கள் கருவோடு எனை தாங்கி நீ பட்ட

பெரும்பாடு அறிவேன்னம்மா …

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் முளைத்தாலும்

உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா ?

உன்னாலே பிறந்தேனே …


அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே

நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி

வேறொன்று ஏது ?….

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே..

 படம்: தென்மேற்குப் பருவக்காற்று

பாடலாசிரியர்: வைரமுத்து

இசை: என்.ஆர்.ரகுநந்தன்

பாடியவர்: விஜய் பிரகாஷ்


கள்ளிக்காட்டில் பிறந்த தாயே

என்ன கல்லுடைச்சி  வளர்த்த நீயே

முள்ளுக்காட்டில் முளைச்ச தாயே

என்ன முள்ளு தைக்க விடல நீயே


காடைக்கும் காட்டு குருவிக்கும்

எந்த புதரிலும் இடமுண்டு...

கொடைக்கும் அடிக்கும் குளிருக்கும்

தாயி ஒதுங்கதான் இடமுண்டா.


கரட்டு மேட்டையே  மாத்துனா அவ

கல்ல புழிஞ்சி கஞ்சி ஊத்துனா  (2)


கள்ளிக்காட்டில் பிறந்த தாயே

என்ன கல்லுடைச்சி  வளர்த்த நீயே

முள்ளுக்காட்டில் முளைச்ச தாயே

என்ன முள்ளு தைக்க விடல நீயே


உளவு காட்டுல வெத  வெதப்பா

ஒணாகரட்டுல  கூல் குடிப்பா

வாரன்-குழாயில் கை துடைப்பா

பாவமப்பா  .....


வெளி முள்ளில் அவ விறகெடுப்பா

நாழி அரிசி வச்சு ஒலை அரிப்பா

புள்ள உண்ட மிச்சம் உண்டு

உசுர்  வளர்ப்பா தியாகமப்பா  ...


கிழக்கு விடியும் முன்ன முளிக்குரா

அவ உலக்கை  பிடிச்சுதான் தேறக்குறா

மண்ண கிண்டிதான் பொழைக்குறா

உடல் மைக்கைபோக  மட்டும் உழைக்குறா


கள்ளிக்காட்டில் பிறந்த தாயே

என்ன கல்லுடைச்சி  வளர்த்த நீயே


தங்கம் தனி தங்கம் மாசு-இல்ல

தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல

தாய்வழி சொந்தம் போல பாசமில்ல

நேசமில்ல


தாயி கையில் என்ன மந்திரமா

கேப்பைக்கழியில் ஒரு நெய் ஒழுகும்

காஞ்ச கருவாடு தேன் ஒழுகும்

அவ சமைக்கயில ..


சொந்தம் நூறு சொந்தம் இருக்குது

பெத்த தாய் போல ஒன்னு நிலைக்குதா

சாமி நூறு சாமி இருக்குது

தாயி ரெண்டு தாயி இருக்குதா


கள்ளிக்காட்டில் பிறந்த தாயே

என்ன கல்லுடைச்சி  வளர்த்த நீயே

கண்கள் நீயே... காற்றும் நீயே

திரைப்படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடியவர்: சித்ரா
இசை:  G.V. பிரகாஷ்
வரிகள்: தாமரை


கண்கள் நீயே... காற்றும் நீயே

தூணும் நீ... துரும்பில் நீ

வண்ணம் நீயே... வானும் நீயே

ஊனும் நீ... உயிரும் நீ


பல நாள் கனவே

ஒரு நாள் நனவே

ஏக்கங்கள் தீர்த்தாயே!


எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்

நான் தான் நீ வேறில்லை

முகம் வெள்ளை தாள்

அதில் முத்தத்தால்

ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே

இதழ் எச்சில் நீர்

எனும் தீர்த்ததால்

அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே


கண்கள் நீயே... காற்றும் நீயே

தூணும் நீ... துரும்பில் நீ

வண்ணம் நீயே... வானும் நீயே

ஊனும் நீ... உயிரும் நீ


இந்த நிமிடம் நீயும் வளர்ந்து

என்னைத்தாங்க ஏங்கினேன்

அடுத்தக்கணமே குழந்தையாக

என்றும் இருக்க வேண்டினேன்


தோளில் ஆடும் சேலை

தொட்டில் தான் பாதிவேளை

சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ

இசையாக பலபல ஓசை செய்திடும்

இராவணன் ஈடில்லா என்மகன்


எனைத்தள்ளும் முன்

குழி கன்னத்தில்

என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே

எனைக்கிள்ளும் முன்

விரல் மெத்தைக்குள்

என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே


என்னை விட்டு இரண்டு எட்டு

தள்ளிப் போனால் தவிக்கிறேன்

மீண்டும் உன்னை அள்ளி எடுத்து

கருவில் வைக்க நினைக்கிறேன்

போகும் பாதை நீளம்

கூரையாய் நீல வானம்


பலநூறு மொழிகளில் பேசும்முதல் மேதை நீ

பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ

நான் கொள்ளும் கர்வம் நீ


கடல் ஐந்தாறு மலை ஐநூறு

இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை

உடல் செவ்வாது பிணி ஒவ்வாது

பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை


கண்கள் நீயே... காற்றும் நீயே

தூணும் நீ... துரும்பில் நீ

வண்ணம் நீயே... வானும் நீயே

ஊனும் நீ... உயிரும் நீ


Saturday, July 25, 2020

செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன்...

நல்லூர் பாடல்கள் புதுவை

செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்
தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்திடும் உன் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்.

பாசமுடன் நான் அழைக்க நல்ல வழி காட்டு - உந்தன்
பத்தினிகளோடெனக்கு வந்து முகம் காட்டு
வாசலெங்கும் எரியுதையா உந்தன் விழி காட்டு
இப்போ வள்ளி தெய்வயானையுடன் என்ன விளையாட்டு.

நீயிருக்கும் வீதியிலே பேய்கள் இருக்காது
நல்லூர் வீடு தொழுவோர்களுக்கு துன்பம் இருக்காது
வாயிருக்கும் வரையுனையே பாடி ஆடுவேன் -தினம்
வாசலிலே வந்திருந்து உன்னை தேடுவேன்

சந்நிதியில் உந்தனது தேரை எரித்தார்கள் -தமிழ்
தந்தவனே எங்களுக்கு சாவை விதைத்தார்கள்
விண்ணதிரக் குண்டு மழை இன்று பொழிவார்கள் -எங்கள்
வேலவனே அன்னவர்கள் என்று விழுவார்கள்?

செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்
தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்தி வரும் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்"

பாடலை இயற்றியவர்: புதுவை இரத்தினதுரை
பாடியவர்: வர்ணராமேஸ்வரன்
இசை: இசைவாணர் கண்ணன்

Thursday, July 2, 2020



மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்ட உடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடதென்னும்
வானம் உண்டோ சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே


தாமரை மேலே நீர் துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்கை தான் என்ன சொல்


மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே


மேடையை போலே வாழ்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச்செல்ல
ஒடையை போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடுதான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா....


மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்ட உடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடதென்னும்
வானம் உண்டோ சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

படம் : மௌன ராகம்இசை : இளையராஜாபாடலாசிரியர்: வாலிபாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Sunday, February 16, 2020

விண்வரும் மேகங்கள் பாடும்....

விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரர்கள் நாமங்கள் கூறும்
கண்வழி கங்கைகள் பாயும் இவர் காவிய நாயகர் ஆகும்
[புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்
எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)

வேங்கைகளாகி விடிவுகள் தேடி விழுந்த வீரர்களே
தமிழ் வீடுகள் யாவிலும் விளக்குகளாக எரியும் சுடருகளே
இளமைக்கால இனிமைகள் யாவும் துறந்த வேங்கைகளே
தமிழனத்துக்காக இரந்து தீயில் எரிந்த வீரர்களே

[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)
தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

[விண்வரும்.....]

எதிரிகள் பாடி வீடுகள் ஏறி நடந்த வேங்கைகளே
உயிர் இழந்த போதும் உணர்வுகளோடு மடிந்த வீரர்களே
காற்றும் நிலவும் பூக்கும் மலரும் உங்கள் பெயர்சொல்லும்
இனி காலம் யாவும் நீளும் போது எங்கள் பெயர் வெல்லும்

[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)
தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

[விண்வரும்.....]

உங்கள் கனவே எங்கள் நினைவாய் எழுந்து நிற்கின்றோம்
உயிர் ஓடும் குருதி யாவும் சொரியும் நிலத்தில் நிற்கின்றோம்
தலைவன் வழியில் புலிகள் அணியாய் நடந்து செல்கின்றோம்
வரும் தடைகள் யாவும் உடையும் உடையும் நிமிர்ந்த கொள்கின்றோம்

[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)
தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

Saturday, July 13, 2019

கண்ணான கண்ணே...


கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா.
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூப்போல நீவ வா.

நான் காத்து நின்றேன்
காலங்கள்தோறும்
என் ஏக்கம் தீருமா
நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா

கண்ணீராய் மேகம் தூவும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா

ஆராரிராரோ
ராரோ ராரோ
ஆராரிராரோ
ஆராரிராரோ
ராரோ ராரோ
ஆராரிராரோ

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா.
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூப்போல நீவ வா.

அலைக்கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே.

புதை மணலில் வீழ்ந்தேன்
புதைந்திடவே இருந்தேன்
குறுநகையை தந்தே
மீட்டாய் என்னை.

விண்ணோடும் மண்ணோடும்
ஆடும் பெரும் ஊஞ்சல்
மனதோரம்.
கண்பட்டு நூல்விட்டு
போகும் என ஏதோ
பயம் கூடும்.

மயில் ஒன்றை பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்.
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும்
இதே வினாடி

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா.
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூப்போல நீவ வா.

நீ தூங்கும் போது
முன்னெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்.
போர்வைகள் பொத்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்

எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும்
மௌனத்தில் பேசணும்

ஆராரிராரோ
ராரோ ராரோ
ஆராரிராரோ
ஆராரிராரோ
ராரோ ராரோ
ஆராரிராரோ

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே...


திரைப்படம் ---  விஸ்வாசம்
பாடல் ஆசிரியர் :  தாமரை
பாடகர் :  சித் ஸ்ரீராம்

Sunday, March 31, 2019

அமைதியான நதியினிலே ஓடும்

அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்

அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்



தென்னம் இளங்கீற்றினிலே...ஏ..ஏ..ஏ
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது

அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்



ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமனம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமனம் வீழ்வதில்லை

அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம்
ஓ ஓ ஓ......
அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது

அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்



அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்துவிடும்
அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்துவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்

அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.


படம்:- ஆண்டவன் கட்டளை - 1964;
இசை:- விஸ்வநாதன், ராமமூர்த்தி;
பாடல் வரிகள்:- கண்ணதாசன்;
குரல்:- சௌந்தர்ராஜன், சுசிலா,
நடிப்பு:- சிவாஜி கணேசன் & தேவிகா.



Wednesday, March 27, 2019

வைகைக்கரை காற்றே நில்லு

வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கைதனைத் தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

(வைகைக் கரை)

திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கண்ணிவிடும்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ
சோகமது நீங்காதோ
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

(வைகைக் கரை காற்றே நில்லு)

திரைப்படம் : உயிருள்ளவரை உஷா
இசை: டி. ராஜேந்தர்
பாடியவர் : கே.ஜே. ஏசுதாஸ்