Saturday, July 25, 2020

செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன்...

நல்லூர் பாடல்கள் புதுவை

செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்
தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்திடும் உன் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்.

பாசமுடன் நான் அழைக்க நல்ல வழி காட்டு - உந்தன்
பத்தினிகளோடெனக்கு வந்து முகம் காட்டு
வாசலெங்கும் எரியுதையா உந்தன் விழி காட்டு
இப்போ வள்ளி தெய்வயானையுடன் என்ன விளையாட்டு.

நீயிருக்கும் வீதியிலே பேய்கள் இருக்காது
நல்லூர் வீடு தொழுவோர்களுக்கு துன்பம் இருக்காது
வாயிருக்கும் வரையுனையே பாடி ஆடுவேன் -தினம்
வாசலிலே வந்திருந்து உன்னை தேடுவேன்

சந்நிதியில் உந்தனது தேரை எரித்தார்கள் -தமிழ்
தந்தவனே எங்களுக்கு சாவை விதைத்தார்கள்
விண்ணதிரக் குண்டு மழை இன்று பொழிவார்கள் -எங்கள்
வேலவனே அன்னவர்கள் என்று விழுவார்கள்?

செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்
தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்தி வரும் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்"

பாடலை இயற்றியவர்: புதுவை இரத்தினதுரை
பாடியவர்: வர்ணராமேஸ்வரன்
இசை: இசைவாணர் கண்ணன்

Thursday, July 2, 2020



மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்ட உடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடதென்னும்
வானம் உண்டோ சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே


தாமரை மேலே நீர் துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்கை தான் என்ன சொல்


மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே


மேடையை போலே வாழ்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச்செல்ல
ஒடையை போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடுதான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா....


மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்ட உடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடதென்னும்
வானம் உண்டோ சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

படம் : மௌன ராகம்இசை : இளையராஜாபாடலாசிரியர்: வாலிபாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Sunday, February 16, 2020

விண்வரும் மேகங்கள் பாடும்....

விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரர்கள் நாமங்கள் கூறும்
கண்வழி கங்கைகள் பாயும் இவர் காவிய நாயகர் ஆகும்
[புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்
எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)

வேங்கைகளாகி விடிவுகள் தேடி விழுந்த வீரர்களே
தமிழ் வீடுகள் யாவிலும் விளக்குகளாக எரியும் சுடருகளே
இளமைக்கால இனிமைகள் யாவும் துறந்த வேங்கைகளே
தமிழனத்துக்காக இரந்து தீயில் எரிந்த வீரர்களே

[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)
தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

[விண்வரும்.....]

எதிரிகள் பாடி வீடுகள் ஏறி நடந்த வேங்கைகளே
உயிர் இழந்த போதும் உணர்வுகளோடு மடிந்த வீரர்களே
காற்றும் நிலவும் பூக்கும் மலரும் உங்கள் பெயர்சொல்லும்
இனி காலம் யாவும் நீளும் போது எங்கள் பெயர் வெல்லும்

[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)
தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

[விண்வரும்.....]

உங்கள் கனவே எங்கள் நினைவாய் எழுந்து நிற்கின்றோம்
உயிர் ஓடும் குருதி யாவும் சொரியும் நிலத்தில் நிற்கின்றோம்
தலைவன் வழியில் புலிகள் அணியாய் நடந்து செல்கின்றோம்
வரும் தடைகள் யாவும் உடையும் உடையும் நிமிர்ந்த கொள்கின்றோம்

[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)
தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

Saturday, July 13, 2019

கண்ணான கண்ணே...


கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா.
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூப்போல நீவ வா.

நான் காத்து நின்றேன்
காலங்கள்தோறும்
என் ஏக்கம் தீருமா
நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா

கண்ணீராய் மேகம் தூவும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா

ஆராரிராரோ
ராரோ ராரோ
ஆராரிராரோ
ஆராரிராரோ
ராரோ ராரோ
ஆராரிராரோ

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா.
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூப்போல நீவ வா.

அலைக்கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே.

புதை மணலில் வீழ்ந்தேன்
புதைந்திடவே இருந்தேன்
குறுநகையை தந்தே
மீட்டாய் என்னை.

விண்ணோடும் மண்ணோடும்
ஆடும் பெரும் ஊஞ்சல்
மனதோரம்.
கண்பட்டு நூல்விட்டு
போகும் என ஏதோ
பயம் கூடும்.

மயில் ஒன்றை பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்.
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும்
இதே வினாடி

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா.
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூப்போல நீவ வா.

நீ தூங்கும் போது
முன்னெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்.
போர்வைகள் பொத்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்

எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும்
மௌனத்தில் பேசணும்

ஆராரிராரோ
ராரோ ராரோ
ஆராரிராரோ
ஆராரிராரோ
ராரோ ராரோ
ஆராரிராரோ

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே...


திரைப்படம் ---  விஸ்வாசம்
பாடல் ஆசிரியர் :  தாமரை
பாடகர் :  சித் ஸ்ரீராம்

Sunday, March 31, 2019

அமைதியான நதியினிலே ஓடும்

அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்

அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்



தென்னம் இளங்கீற்றினிலே...ஏ..ஏ..ஏ
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது

அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்



ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமனம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமனம் வீழ்வதில்லை

அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம்
ஓ ஓ ஓ......
அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது

அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்



அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்துவிடும்
அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்துவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்

அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.


படம்:- ஆண்டவன் கட்டளை - 1964;
இசை:- விஸ்வநாதன், ராமமூர்த்தி;
பாடல் வரிகள்:- கண்ணதாசன்;
குரல்:- சௌந்தர்ராஜன், சுசிலா,
நடிப்பு:- சிவாஜி கணேசன் & தேவிகா.



Wednesday, March 27, 2019

வைகைக்கரை காற்றே நில்லு

வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கைதனைத் தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

(வைகைக் கரை)

திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கண்ணிவிடும்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ
சோகமது நீங்காதோ
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

(வைகைக் கரை காற்றே நில்லு)

திரைப்படம் : உயிருள்ளவரை உஷா
இசை: டி. ராஜேந்தர்
பாடியவர் : கே.ஜே. ஏசுதாஸ்


இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை ..

படம் - துள்ளாத மனமும் துள்ளும் வரிகள் - வைரமுத்து குரல் - உன்னி கிருஷ்ணன் இசை - எஸ்.ஏ.ராஜ்குமார்

இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை ..
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை ..
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே ..
ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதிலேயே ..
இந்த வாழ்கயே ஒரு தேடல் தான் ..
அதை தேடி தேடி தேடும் மனசு தொலைகிறதே ..

கண் இல்லை என்றாலோ நிறம் பார்க்கமுடியாது ..
நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்க முடியாது ..
குயில் இசை போதுமே அட குயில் முகம் தேவையா ?
உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா ?
கண்ணில் காட்சி தோன்றி விட்டால் கற்பனை தீர்ந்துவிடும் ..
கண்ணில் தோன்ற காட்சி என்றால் கற்பனை வளந்து விடும் ..
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே ..

இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை ..
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை ..


அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்…

திரைப்படம்: முதல் மரியாதை (1985)
பாடியவர்: இளையராஜா & சித்ரா
வரிகள்: வைரமுத்து
இசை: இளையராஜா

அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக

செவிலி…..

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக (2)

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்(2)

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக…

மல்லு வேட்டி கட்டி இருக்கு
அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு

முத்தழகி கட்டிபிடிச்சு முத்தம் குடுக்க
 மஞ்ச வந்து ஒட்டிகிருச்சி

மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு

ஏதுடா வம்பா போச்சி லவுக்கையும் கெடயாது

சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை

பூவு ஒன்னு காண்ணடிச்சா வண்டு வரும் பின்னால

எக்கு தப்பு வேணாம் ம்ம்..

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்(2)

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்.. என் ராசாத்திக்காக..

ரத்தினமே முத்தம் வைக்கவா
அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா
வெக்கதையும் ஒத்தி வைக்கவா
அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா
ஓடிவா ஓடை பக்கம் ஒளியலாம் மெதுவாக
அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாங்க
காத்தடிச்சா தாங்காதடி மல்லிகப்பூ மாராப்பு
கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு
போடி புள்ள எல்லாம் டூப்பு….

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக (2)


பூங்காற்று திரும்புமா?


படம்: முதல் மரியாதை
இசை: இளையராஜா
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: மலேசியா வாசுதேவன், ஜானகி

பூங்காற்று திரும்புமா?
என் பாட்ட விரும்புமா?
பாராட்ட* மடியில் வெச்சுத் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா?

(பூங்காற்று திரும்புமா…)

ராசாவே வருத்தமா?
ஆகாயம் சுருங்குமா?
ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா?

என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல

ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
சொல்லாத சோகத்த சொன்னேனடி

சொக ரக சோகந்தானே

யாரது போரது?

குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

(பூங்காற்று திரும்புமா…)

உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறணும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்

மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே

எசப் பாட்டு படிச்சேன் நானே

பூங்குயில் யாரது?

கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க

அடி நீதானா அந்தக் குயில்?
யார் வீட்டு சொந்தக் குயில்?
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே

நாந்தானே அந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகம் தான் மறந்ததா?


வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்

முதல் மரியாதை
படம்: முதல் மரியாதை
இசை: இளையராஜா
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: மலேசியா வாசுதேவன், S.ஜானகி

வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்

பச்சைக்கிளியோ தொட்டுக்கிருச்சு
இச்சைக்கிளியோ ஒத்துக்கிருச்சு
வச்ச நெருப்பு தொட்டுக்கிருச்சு
பச்ச மனசு பத்திக்கிருச்சு
கைய கட்டி நிக்கச்சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது
சாமிகிட்ட கேளு யாரு போட்ட கோடு
பஞ்சுக்குள்ள தீய வச்சு பொத்தி வச்சவுக யாரு

வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்

ஒன்னக்கண்டு நான் சொக்கி நிக்கிறேன்
கண்ணுக்குள்ள நான் தண்ணி வைக்கிறேன்
சொல்லாமத்தான் தத்தளிக்கிறேன்
தாளமத்தான் தள்ளி நிக்கிறேன்
பாசம் உள்ள தர்மம் இத பாவமின்னு சொல்லாது
குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வைக்கக்கூடாது
புத்தி கெட்ட தேசம் பொடி வச்சு பேசும்
சாதிமத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்

வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே
வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்